search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹூன்டாய் இந்தியா"

    ஹூன்டாய் நிறுவனத்தின் புதிய காரின் பெயர் அக்டோபர் 4-ம் தேதி அறிவிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Hyundai #Santro


    ஹூன்டாய் நிறுவனத்தின் புதிய கார் விரைவில் வெளியாக இருக்கிறது. அதன்படி அக்டோபர் 4-ம் தேதி அந்நிறுவனத்தின் சிறிய ஹேட்ச்பேக் பெயர் அறிவிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து அக்டோபர் மாத இறுதியில் இந்த கார் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.

    ஹூன்டாய் நிறுவனம் தனது சான்ட்ரோ மாடலை புதுப்பொழிவுடன் மீண்டும் அறிமுகம் செய்யலாம் என அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. சிறிய கார் சான்ட்ரோ என பெயரிடப்பட்டு கூடுதலாக முந்தைய மாடல்களை போன்றே சிங் என்ற வார்த்தை சேர்க்கப்படலாம் என கூறப்படுகிறது.

    மேலும் அடுத்த மாத வாக்கில் ஹூன்டாய் நிறுவனம் போட்டி ஒன்றை நடத்தவிருக்கிறது. இதில் வாடிக்கையாளர்களிடம் புதிய காரின் பெயரை வழங்கலாம். இந்தியாவில் சான்ட்ரோ பிரான்டு அதிகம் பிரபலமான மாடலாக இருந்தது. 2000 ஆண்டுகளின் துவக்கத்தில் அதிக பிரபலமாக இருந்த சான்ட்ரோ, பின்னர் ஹூன்டாய் i10 மாடல் அறிமுகமானதும் சான்ட்ரோ விற்பனை குறைந்தது.



    இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களில் ஹூனடாய் சான்ட்ரோ மாடல் அறிமுகமாகும் பட்சத்தில் புதிய ஹேட்ச்பேக் இயான் மாடலுக்கு மாற்றாக அமையும் என கூறப்படுகிறது. புதிய காரின் கேபின் பல்வேறு அம்சங்களுடன் பிரீமியம் ஃபினிஷ் கொண்டிருக்கிறது. புதிய சான்ட்ரோ மாடலில் 1.1 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் BS-VI எமிஷன் மற்றும் AMT யூனிட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 

    உள்புறம் ஹூன்டாய் மாடலில் டூயல்-டோன் வடிவமைப்பு மற்றும் தலைசிறந்த உபகரணங்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. புதிய காரில் வசதியான இருக்கைகள், கால் வைக்கும் வசதி மற்றும் ஹெட்ரூம் வழங்கப்படுகிறது. இதன் டாப்-என்ட் மாடலின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் மல்டி-இன்ஃபர்மேஷன் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட இருக்கிறது. #Hyundai #Santro 
    ஹூன்டாய் இந்தியா நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட கிரெட்டா எஸ்யுவி வெளியீட்டு தேதி சார்ந்த விவரங்கள் வெளியாகியுள்ளது.
    புதுடெல்லி:

    ஹூன்டாய் இந்தியா நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட கிரெட்டா எஸ்யுவி மாடல் மே 21-ம் தேதி இந்தியாவில் வெளியிடப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

    இந்தியாவில் சோதனை செய்யப்பட்ட கிரெட்டா புகைப்படங்கள் பலமுறை இணையத்தில் வெளியான நிலையில், இந்த எஸ்யுவி விற்பனையாளர்களிடம் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் புகைப்படங்களும் சமீபத்தில் வெளியாகி இருந்தது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் 2018 ஹூன்டாய் கிரெட்டா விலை மே 21-ம் தேதி அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. 

    ஏற்கனவே புதிய கிரெட்டா மாடலுக்கான முன்பதிவுகளை விற்பனையாளர்கள் துவங்கிவிட்ட நிலையில், இதன் விநியோகம் இம்மாத இறுதியில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேம்படுத்தப்பட்ட ஹூன்டாய் கிரெட்டா மாடலில் காஸ்மெடிக் அப்டேட்கள் மட்டும் செய்யப்பட்டு மெக்கானிக்கல் அம்சங்கள் முந்தைய மாடலை போன்றே வழங்கப்படும் என கூறப்படுகிறது.


    புகைப்படம்: நன்றி RushLane

    புதிய கிரெட்டா காரில் முன்பக்கம் க்ரோம் ட்ரிம் செய்யப்பட்ட ஹெக்சாகோனல் கிரில், முன்பக்க பம்ப்பரில் ஃபாக் லேம்ப் சேர்க்கப்பட்டுள்ளது. பின்புற பம்ப்பர்கள் மற்றும் டெயில்லேம்ப்களில் புதிய வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளது. புதிய 17 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள் தற்போதைய வடிவமைப்புக்கு மாற்றாக வழங்கப்படுகின்றன. 

    புதிய தலைமுறை ஹூன்டாய் எலைட் i20 மாடலில் வழங்கப்பட்டதை போன்ற மென்மையான, கிரே-தீம் செய்யப்பட்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட கிரெட்டா இன்ஜின் அம்சங்களில் 1.4 லிட்டர் டீசல் (90PS, 220 Nm), 1.6 லிட்டர் டீசல் (128PS, 220Nm) மற்றும் 1.6 லிட்டர் பெட்ரோல் (123PS, 151Nm) வழங்கப்பட்டுள்ளது. 

    இந்த இன்ஜின்கள் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன்களை கொண்டுள்ளது. கடந்த ஆண்டுகளில் ஹூன்டாய் கிரெட்டா விற்பனை சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில், புதிய அப்டேட் மூலம் ஹூன்டாய் இந்த நிலையை தக்க வைக்க திட்டமிட்டுள்ளது. 

    இந்தியாவில் ஹூன்டாய் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடல் ஜீப் காம்பஸ், ரெனால்ட் கேப்டூர், டாடா ஹெக்சா மற்றும் மஹேந்திரா எக்ஸ்யுவி500 உள்ளிட்ட மாடல்களுடன் அடுத்த சில ஆண்டுகளில் வெளியாக இருக்கும் சில மாடல்களுக்கு போட்டியாக அமையும்.
    ×